வஞ்சிரம் என்கின்ற மெளலாசி என்கின்ற நெய்மீன் [SEER FISH]

வஞ்சிரம் என்கின்ற மெளலாசி என்கின்ற நெய்மீன். நெய்மீன் என்னும் பெயர் தென்மாவட்டங்களில் வழங்கப்பெறுகின்றது. தமிழகத்தில் பேர்பெற்ற மீன் இதுவாகும். அத்தளவில் மணத்திலும், மருத்துவகுணத்திலும், சுவையிலும் பேர் பெற்றது. இது ஓமேகா 3 எனும் மருத்துவ பொருளை தன்னுள்ளே அடக்கி, சாப்பிடுவோர் இதயங்களுக்கு நன்மை செய்கின்றது. இதன் தலைப்பகுதி, உடல்பகுதி, மற்றும் வால்பகுதி என எல்லா உறுப்புகளும் சமையலுக்கு ஏற்றதாகும். இதன் முள்ளே தனிச்சுவை வாய்ந்தது.இந்த மீன் வறுத்தாலும், குழம்பு வைத்தாலும், அல்லது தேங்காய் அதிகளவில் சேர்த்து தித்திப்பு வைத்தாலும், ருசி அபரிதமானது. சோற்றுக்கும், இட்லி, தோசைக்கும் சிறந்த உணவு. இதை வாங்கும்போது கவனிக்க வேண்டியது யாதெனில், மீன் விரைப்பாக இருக்க வேண்டும், கண்கள் தெளிவுடன் காணப்பட வேண்டும், அரியும்போது அதன் சதைகளில் இரத்தம் தெளிந்து இருக்க வேண்டும். மற்றும் இதன் சதையானது பிடிக்கப்படும் பிரதேசத்திற்கேற்ப சிவந்தோ அல்லது வெளுப்புடனோ காணப்படும். உள்ளூர் மக்கள் இந்த மீனை வாங்கும்போது, இது ஐஸில் வைக்கப்பட்டதா என கவனித்து வாங்க வேண்டும். புதிதாக பிடிக்கப்படுகின்ற வஞ்சிரம் மீனவர் நாக்குகளுக்கே சுவையானது. உள்ளூர் மக்களுக்கு அல்ல. மீறி அதை வாங்கி சமைத்தால், அப்பளம்போல் பொரிந்து முறுக்கிக்கொண்டு விடும்.சாப்பிட கடினமாக இருக்கும். தவிர அதீத மீன்வாடையினால் வீட்டையே கழுவித்தள்ள வேண்டியிருக்கும். ஆனால் மீனவர்களுக்கு இது பழக்கப்பட்டது. எனவே மீனவர் அல்லாத மக்கள் ஐஸில் வைக்கப்பட்டதா என கவனித்து வாங்க வேண்டும். [ஐயப்படுபவர் இதை சோதித்துப் பார்க்கலாம்]

Comments

Popular posts from this blog

முயல் பாறை அல்லது மொசப்பாறை.

கண்ணாடி சுதும்பு.

காலா மீன் [SALMON FISH]