கானாங்கத்தி அல்லது கானாங்கெளுத்தி. ஆங்கிலத்தில் MACEREL என்று அழைக்கப்படுகிறது. இம்மீன் மிகவும் அழுத்தமாக கெட்டியாக இருக்கும். சுவையும் சற்று குறைவாக காணப்படும். ஆனால் விலை கூடுதல். காரணம் இதை கேரளமாநிலத்தினர் விரும்புவதால், அது மொத்தமாக விலை கொடுத்து வாங்கப்படுகின்றது. மற்றும் தமிழக மீனவர்களும் இந்த மீனை விரும்பி உண்ணுகின்றனர். இதை குழம்பாக வைத்தால்தான் ருசியாக இருக்கும். மற்றபடி வறுத்தால் சுவையே தெரியாது. ஆனால் மன அழுத்த குறைபாட்டிற்கு இந்த மீன் மிகவும் நல்லது என்று அறிந்தோர் கூறுகின்றனர்.
முயல் பாறை அல்லது மொசப்பாறை.
முயல் பாறை அல்லது மொசப்பாறை அல்லது முசுங்கு பாறை என்று பலபேர்களில் அழைக்கப்படும் இந்த வகை அரிய மீன் பொதுவாக அங்காடிகளில் விற்கப்படுவதில்லை.----------------------------------காரணம் இது மிக அரிதாகவே கிடைக்கின்றது-------------------------------தவிர இதன் சுவை மிகவும் அற்புதமாக, வான்மேகங்களை உண்பதுபோலவே, சரசரவென தொண்டைக்குள் இறங்கும்.----------------------------------அதனாலேயே மீனவர்கள் தமக்குத்தாமே இதை பங்கிட்டுக் கொள்வார்கள், மீறி அங்காடிக்கு வந்தால், வியாபாரிகளே தத்தம் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுவார்கள்.
Comments
Post a Comment